பூண்டி அருகே புல்லரம்பாக்கத்தில் மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புல்லரம்பாக்கத்தில் மாவோயிஸ்டுகள் தசரதன் மற்றும் செண்பகவள்ளி ஆகியோர் கைது.

Last Updated : Feb 10, 2018, 11:53 AM IST
பூண்டி அருகே புல்லரம்பாக்கத்தில் மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது! title=

திருவள்ளூர்: சென்னையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கத்தில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தசரதன் மற்றும் செண்பகவள்ளி என்பதும் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகே இவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும் என்றும், அப்பகுதியில் இதுபோன்று மேலும் சிலர் பதுங்கியிருக்கிறார்களா என்று காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News