பழனியில் கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் தீர்வு கூறும் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறுவனை தனது இருக்கையில் அமரவைத்து கோட்டாச்சியர் சிவக்குமார் பாராட்டி மகிழ்ந்தார்.
குமாரபாளையத்தில் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 வது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிற திருவள்ளுவரின் திருக்குறள்படி வாழ்ந்து காட்டியவர்தான், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார். இன்று அவருக்கு128வது பிறந்தநாள். இந்நன்னாளில் அவரை நினைவுகொள்வது சாலச்சிறந்ததாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.