அதிசயம்- சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில்!

Last Updated : Feb 22, 2017, 01:42 PM IST
அதிசயம்- சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில்! title=

சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய தீ வானவில்லை பார்த்த பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

மாலை 5 மணியளவில் ஒரு மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி மறைந்தது.

சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு அதன் ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Trending News