உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!

உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் இன்று தங்களது பதவியை ஏற்றனர்.

Last Updated : May 24, 2019, 11:02 AM IST
உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்! title=

உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் இன்று தங்களது பதவியை ஏற்றனர்.

 

 

நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 31 ஆக உயர்ந்துள்ளது. 

உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று  பதவியேற்றனர். அவர்கள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Trending News