புதிய DDCA தலைவராகிறார் பத்திரிகையாளர் ராஜத் சர்மா!!

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!!

Last Updated : Jul 2, 2018, 04:13 PM IST
புதிய DDCA தலைவராகிறார் பத்திரிகையாளர் ராஜத் சர்மா!! title=

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!!

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கான புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பத்திரிகையாளர் ரஜத் சர்மா, 1521 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் வீரர் மதன் லாலை, ரஜத் தோற்கடித்தார். 

பத்திரிகையாளர் ரஜத் சர்மா மொத்தம் 1521 வாக்குகளை பெற்றார். மதன் லால் 1004 வாக்குகளும், போட்டியில் இருந்த மற்றொரு வேட்பாளரான வழக்கறிஞர் விகாஸ் சிங் 232, ரவி குப்தா 26 வாக்குகள் மட்டுமே பெற்றனர். நோட்டாவுக்கு 8 வாக்குகள் விழுந்துள்ளது. 

மேலும், பிசிசிஐ-ன் செயல் தலைவர் சி.கே.கண்ணாவின் மனைவி ஷாஷி, டெல்லி சங்கத்தின் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். டெல்லி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷேஹ் பன்சாலின், இளைய சகோதரரான ராகேஷ் பன்சாலிடம் போட்டியிட்டு ஷாஷி தோல்வி கண்டார். 

ஷாஷியை சுமார் 278 வாக்குகள் வித்தியாசத்தில் ராகேஷ் வென்றார். ராகேஷுக்கு 1364 வாக்குகளும், ஷாஷிக்கு 1086 வாக்குகளும் கிடைத்தன. 

கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக, முன்னாள் விளையாட்டு குழு தலைவர் வினோத் திஹாரா (1374 வாக்குகளில்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மஞ்சித் சிங்கை (998), 376 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

கூட்டு செயலாளர் பதவிக்கு முன்னாள் பொருளாளர் ரவீந்தரின் சகோதரர் ராஜன் மன்சண்டா (1402 வாக்குகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு ஓம் பிரகாஷ் சர்மா (1365), இயக்குநராக, பயிற்சியாளர் சஞ்சய் பார்த்வாஜ், மகளிர் இயக்குநராக ரேணு கண்ணா தேர்வு செய்யப்பட்டனர்.

 

Trending News