ஒடிசா உயிரியல் பூங்காவின் பாகுபலி!

Last Updated : May 11, 2017, 04:42 PM IST
ஒடிசா உயிரியல் பூங்காவின் பாகுபலி! title=

ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மூன்று ஜோடி புலிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏழு புலிக்குட்டிகள் பிறந்தன. 

இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்க ஒரு ஆலோசனை பெட்டி செய்யப்பட்டது அதில் சுமார் 400 பெயர்களை பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் பாகுபலியின் பெயரை வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே அளவு தேவசேனாவின் பெயருக்கும் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

பார்வையாளர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பூங்கா அதிகாரிகள், நந்தன் மற்றும் மேகா ஆகிய புலி ஜோடிகளுக்கு பிறந்த இரண்டு ஆண் குட்டிகளுக்கு, பாகுபலி மற்றும் குந்தன் என பெயரிடப்பட்டது.

அதனோடு பார்வையாளர்கள் விரும்பிய மற்ற பெயர்கள் மீதமுள்ள ஐந்து புலிக்குட்டிகளுக்கு சூட்டப்பட்டன. பிறந்த புலிக்குட்டிகள் அனைத்தும் ஆண் என்பதால் தேவசேனா பெயர் எந்த புலிக்குட்டிகளுக்கும் வைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒடிசா வனத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.

Trending News