7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.7 லட்சமாக உயர்கிறதா?

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. மத்திய அரசு பணியாளரகளுக்கான பணிக்கொடை ரூ .7 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2021, 08:05 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ .7 லட்சமாக உயர்த்தப்படும்
  • எப்படி இந்த பணிக்கொடைத் தொகை கணக்கிடப்படுகிறது?
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.7 லட்சமாக உயர்கிறதா?   title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ .7 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எப்படி இந்த பணிக்கொடைத் தொகை கணக்கிடப்படுகிறது?

ஓய்வு பெறும் போது ஊழியர் அடிப்படை சம்பளம் 40,000 ரூபாயாக இருந்தால், அவர்களின் கிராஜுவிட்டி மற்றும் விடுப்புகளுக்கானத் தொகை 1,17,000 ரூபாயாக இருக்கும்.  

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைத் தந்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி (Dearness Allowance (DA)), Dearness Relief (DR) ஆகியவற்றை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

2020 ஜனவரி முதல் நாளில் இருந்து, 2021 ஜூலை 30ம் தேதி வரை ஓய்வு பெற்ற அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

Read Also | லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்!

நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் தகவல்களின்படி, மத்திய அரசு இப்போது 31%ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. முன்பு 17% ஆக இருந்த அகவிலைப்படி ஜூலையில் தான் 28% சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

இப்போது, மத்திய சிவில் சர்வீசஸ் (பென்ஷன்) விதிகள், 1972 ன் விதிகளின்படி, ஓய்வூதியம் அல்லது ஊழியர் இறக்கும் போது டி.ஏ. எனவே, செலவுத் துறையால் வழங்கப்பட்ட அலுவலக குறிப்பு (Office Memorandum (OM)) அறிவுறுத்தல்களின் படி, இந்த ஊழியர்களின் ஓய்வூதிய நன்மைகள் பின்வருமாறு கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு ஊழியர் ஜனவரி 1, 2020 மற்றும் ஜூலை 30, 2021 க்கு இடையில் ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கு பொருந்தும் டிஏ விகிதம் 21% - 17% + 4%. இது ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2020 வரையிலானது.

ஒரு ஊழியர் ஜூலை 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கு பொருந்தும் டிஏ விகிதம் 24% - 17% + 4% ஆக இருக்கும். இது, ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2020 வரை, + 1% ஜூலை 1 முதல், 2020, டிசம்பர் 31, 2020 வரையிலானதாக இருக்கும்.

ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை

ஒரு ஊழியர் ஜனவரி 1, 2021 முதல் ஜூன் 30, 2021 வரை ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கு பொருந்தும் டிஏ விகிதம் 28% - 17% + 4% ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2020 வரை, + 1% என கணக்கிடப்படுகிறது. இது, ஜூலை 1 முதல், 2020, டிசம்பர் 31, 2020 முதல், + 1% ஜனவரி 1 முதல் ஜூன் 30 2021 வரையிலானதாக இருக்கும்.

ஏஜி அலுவலகத்தின் முன்னாள் தலைவர் பிரயாக்ராஜ், எச்எஸ் திவாரியை மேற்கோள் காட்டி, ஜாக்ரான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஊழியர் ஓய்வு பெறும் போது அடிப்படை சம்பளமாக ரூ .40,000 சம்பாதித்தால், அவர்களின் கிராஜூட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட் தொகை சுமார் 1,17,000 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ .2,50,000 என்றால், ஓய்வூதிய நிதி 7 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கும்.

தற்போதைய விதிகளின்படி, ஒரு ஊழியர் ஐந்து வருட சேவையை நிறைவு செய்த பிறகு, பணிக்கொடை செலுத்துதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியிருந்தாலும், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணியாளர்கள் பணிக்கொடை செலுத்துவதற்கு 1 வருட சேவையை மட்டும் நிறைவு செய்தால் போதுமானது என்பதால் இதிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News