சிம்ம ராசிக்கு சிங்க பலத்தை தரும் நட்புகள்: இன்றைய ராசிபலன்

2022, மே 6வெள்ளிக்கிழமையான இன்று கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது. மீன ராசிக்காரர்களுக்கு பண வரத்து இருக்கும்.. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2022, 07:24 AM IST
  • ரிஷபத்திற்கு அருமையான நாள்
  • மீன ராசியினருக்கு பொற்ப்பு அதிகரிக்கும்
  • சிம்ம ராசியினருக்கு சீற்றம் குறையும் நாள்
சிம்ம ராசிக்கு சிங்க பலத்தை தரும் நட்புகள்: இன்றைய ராசிபலன் title=

புதுடெல்லி: இந்த நாள் (2022, மே 6) உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையான இன்று கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் காத்துக் கொண்டிருந்தால், ரிஷப ராசிக்காரர்கள் அமைதி காப்பது நல்லது. மீன ராசிக்காரர்களுக்கு பண வரத்து இருக்கும்.. 

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்றாக இருக்கிறது. தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என்பதால் விழிப்புணர்வுடன் பயணிக்கவும். எதையும் செய்து முடிக்கலாம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று. உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.  

ரிஷபம்: எதிர்பாராத தனவரவு கிடைக்கும். இழுபறியான காரியங்களை செய்யும் பொழுது இன்று மிதுன ராசிக்காரர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவது நல்லது. அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொண்டு, விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளின் மூலம் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அருமையான நாள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது, ஆனாலும் இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். அன்புடன் அனைவரையும் அணுகினால் வாழ்வில் வளம் பெறலாம் என்பதை புரிந்துக் கொள்ளும் நாளாக இன்று அமையும்.   

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

கன்னி: கன்னி ராசியினருக்கு புதிய வேலை தொடர்பன எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.இன்று உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டால் நல்லது என்பது புரியும்.. வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் அகலும் என்றாலும், சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள் மே 6.

துலாம்: துலாம் ராசியினருக்கு இன்று எச்சரிக்கை உணர்வு மனதில் ஏற்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தாய்மாமன் வழியில் இருந்த மனத்தடைகள் அகலும். வாகனங்கள் செலவு வைக்கலாம். மிதமான பலன்களைக் கொண்ட நாள் இன்று.

விருச்சிகம்: எதிர்பாராத செலவுகள் வரலாம் என்பதால் சற்று பதற்றமான நாளாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளால் மனம் அமைதியற்று தவிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தால் அமைதியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | ஏழரை சனியின் வகைகளும் அவற்றின் பாதிப்பிற்கு பரிகாரங்களும்

தனுசு: தனுசு ராசியினருக்கு இன்று சந்திராஷ்டம நாள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் மனதில் வரும்.. சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணம் அதிகமாக செலவாகும் என்பதால் கவனமாக இருக்கவும்

மகரம்: நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி என்பதை புரிந்துக் கொள்வீர்கள். தடைகளும், தாமதங்களும் இருந்தாலும் இறுதியில் எல்லாம் நன்றாகவே நடக்கும். உடன்பிறந்தவர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளும் நாள் இன்று.

கும்பம்: சேமிப்பு அதிகரிப்பதால் என்ன பலன் என்ற அலட்சிய மனப்பாங்கு மாறும் நாள். நுட்பமான விஷயங்களை கவனமாக கவனித்தால் பல விஷயங்களை புரிந்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மீனம்:  புதிய தொழில் செய்வது தொடர்பான ஆலோசனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் சுமூகமான உறவும் ஒற்றுமையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் அமைதி இருந்தால் போதும் என்ற எண்ணம் வலுப்படும்.

மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News