30 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கம்!!

Last Updated : Oct 20, 2016, 05:02 PM IST
30 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கம்!! title=

ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களில் சுமார் 20 லட்சம் பேரின் டெபிட் கார்டுகளை முடக்கியுள்ளது. ஏடிஎம் மையங்கள் மல்வாரே தாக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

கடந்த ஜூலை மாத நிலவரப்படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் தரப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

Trending News