மீண்டும் இருளுக்குள்... நடிகையின் வேதனை பதிவு

தன்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க சிலர் நினைக்கிறார்களென்று நடிகை பாவனா வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 27, 2022, 04:29 PM IST
  • நடிகை பாவனா முன்னணி நடிகையாக இருந்தவர்
  • சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்
  • அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது
 மீண்டும் இருளுக்குள்... நடிகையின் வேதனை பதிவு title=

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. தமிழில் இவர் நடித்த தீபாவளி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவரை. அஜித்துடன் அசல் படத்திலும் பாவனா நடித்திருக்கிறார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. அந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் படிக்க | விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!!

இதனையடுத்து அவர் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் படங்கள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வாழ்க்கையில் அவர் துன்பத்தை சந்தித்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் மீண்டு வந்து மீஇண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துவருகின்றனர்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அவர் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

Bhavana and her husband

இந்நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன், என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். 

 

எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பூஜை அறையில் ஃபோட்டோ... வெந்து தணிந்தது காடு ஐசரிக்கு வணக்கத்த போடு - கூல் சுரேஷூக்கு செல்ஃபோன் கிஃப்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News