உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் நயன் - விக்னேஷ்! போட்டோ வைரல்

First Onam with Uyir & Ulagam: மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்ட அன்புள்ள அப்பா விக்னேஷ் சிவன்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2023, 12:34 PM IST
  • ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்
  • நயன் -விக்கி புகைப்படங்கள் வைரல்
  • அன்புள்ள அப்பா விக்னேஷ் சிவன்
உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் நயன் - விக்னேஷ்! போட்டோ வைரல் title=

சென்னை: தேவர்களின் பூமி என்று அழைக்கப்படும், கேரள மாநிலத்தின் பெருமைமிகு பண்டிகை ஓணம். பத்து நாள் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்களை நேரடியாக பார்க்க மகாபலி சக்கரவர்த்தி வருவதாக ஐதீகம். அசுர குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, மக்களின் மீது அன்பு கொண்டவர். தன் நாட்டு மக்கள் வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என்பதை தெரிந்துக் கொள்ள வரும் முன்னாள் அரசரை போற்றும் பண்டிகை ஓணம்.

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் பண்டிகையின் கிளைமாக்ஸாக ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பிரபல நடிகை நயன்தாராவும் தேவபூமியை சேர்ந்தவர். ஓணம் பண்டிகையை மத பேதமின்றி அனைத்து மலையாளிகளும் கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் காலை ஊன்றிய நயன்தாரா, தெலுங்கு மலையாளம் கன்னடம் என 80 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமண செய்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | தமன்னா கூட இப்படி ஆடலம்மா! சூப்பர்! ரயில் பயணிகளின் ஜெயிலர் பட காவாலா டான்ஸ் வைரல்

மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம், ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கோலிவுட்டின் இந்த க்யூட் கபுள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

2022 அக்டோபர் 10 ஆம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளனர். நயன்தாரா குடும்பம் தொடர்பான எந்தவொரு புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகும். 

அந்த வகையில், தற்போது குழந்தைகளுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடும் காதல் தம்பதிகள், குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடும் புகைப்படம் வைரலாகிறது.

மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News