சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்தியா முதலில்' 'பேட்டிங்'

Last Updated : Jun 8, 2017, 03:38 PM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்தியா முதலில்' 'பேட்டிங்' title=

சம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி முதலில் 'பேட்டிங்' துவக்கியள்ளது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

ஜூன் 1-ம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் தொடங்கியது. இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதுகின்றது.

இலங்கை அணியில் முழங்கால் காயம் காரணமாக சமரா கபுகேதரா விலகினார். காயத்தில் இருந்து மீண்ட ரெகுலர் கேப்டன் மாத்யூஸ் அணிக்கு திரும்பினார். உபுல் தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் திசாரா பெரேரா வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் டாஸ்' வென்ற இலங்கை அணி பீல்டிங்' தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்து வருகிறது.

Trending News