பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி போராடி வெற்றிபெற்றது!

டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் 13-வது போட்டியில் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Last Updated : Apr 2, 2019, 12:01 AM IST
பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி போராடி வெற்றிபெற்றது! title=

டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் 13-வது போட்டியில் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2019 தொடரின் 13-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலி பிந்திரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக வீரர்  ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. 

இதனையடுத்து பஞ்சாப் தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 15(11), சாம் கரன் 20(10) ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீர்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பஞ்சாப் அணி தரப்பில் சர்ப்ரஸ் கான் 39(29), டேவிட் மில்லர் 43(30) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோறிஸ் 3 விக்கெட், ரபாடா மற்றும் சந்தீப் லும்பிச்சன் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

டெல்லி அணியின் தரப்பில் களமிறங்கிய துவக்க வீரர் பிரித்திவி ஷா 0(1) ரன்களில் வெளியேற, மறுமுனையில் ஷிகர் தவான் 30(25) ரன்கள் குவித்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 28(22), ரிஷாப் பன்ட் 39(26), இன்கிராம் 38(29) ரன்கள் குவித்து வெளியேறினர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் காரணமாக ஆட்டத்தின் 19.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது பஞ்சாப் அணி பெற்றுள்ள வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை அணி முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

Trending News