4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர தந்தை..!

4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : May 16, 2022, 09:39 AM IST
  • 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை
  • தந்தையில் கொடூர செயலால் அதிர்ச்சி
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர தந்தை..! title=

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு 4 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில்  ராஜேந்திரன், அவரது 4 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குழந்தைகள் நல காப்பகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்குள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அது மட்டுமின்றி குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மேலும் படிக்க | கோவையில் மாயமான 13 வயது மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் மீட்ட போலீசார்

 இதனை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக அமைப்பு சார்பில் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள்னர். இது குறித்து தகவல் அறிந்த ராஜேந்திரன் தலைமறைவாக உள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், ராஜேந்திரன் அந்த ஊர் பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதும், ஆபாசமாக பேசியதும் தெரிய வந்துள்ளது. அது மட்டும் இன்றி தொடர்ந்து இதுபோன்ற சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்த ராஜேந்திரனை அப்பகுதி முக்கியஸ்தர்கள் ஊர் மூன் கூட்டி நிற்க வைத்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு இடையேதான் ராஜேந்திரன் சொந்த மகளிடமே தகாத முறையில் நடந்துள்ளார் என்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குழந்தையின் தாயிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளார்.

பிஞ்சு குழந்தைக்கு தந்தை செய்த கொடூர செயலை கூட கண்காணிக்காத வகையில் தாயும் அலட்சியத்துடன் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். 

மேலும் படிக்க | தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News