TN Lockdown: மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால்,  கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 05:58 AM IST
  • மொபைல் மற்றும் அதுசார்ந்த பொருள்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பொது மக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • வீடியோ கான்பரென்ஸிங் மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும்
TN Lockdown: மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை title=

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால்,  கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.  

தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில், சலூன்கள், டாஸ்மாக் (Tasmac) கடைகள், தேநீர்க் கடைகள், இனிப்பு மற்றும் கார விற்பனை கடைகள்  ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இ-சேவை மையங்கள் இயங்கவும், கிரைண்டர்,மிக்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருள்களை விற்பனை செய்யும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மொபைல்  மற்றும் அதுசார்ந்த பொருள்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   

மேலும் பொது மக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | TN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு 

 

தமிழகத்தில்  (Tamil Nadu), கொரோனா தொற்று பாதிப்புகள் நாளொன்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் பதிவாகி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று ஆலோசனை நடத்துகிறார். வீடியோ கான்பரென்ஸிங்  மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும்.

பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அவர்  ஆலோசனை செய்ய உள்ளார். பின்னர் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 254 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 29,801 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ | Tamil Nadu: தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News