100 உயிரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்; விரைவில் விசாரணை...

உத்திரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயத்திற்கு 100 பேர் பலியானதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது!

Last Updated : Feb 11, 2019, 09:40 AM IST
100 உயிரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்; விரைவில் விசாரணை... title=

உத்திரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயத்திற்கு 100 பேர் பலியானதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்படி வந்தது? மக்கள் பலியானதிற்கான காரணம் என்ன? என்பது தொடர்ந்து மர்மமாக இருந்து வரும் நிலையில் இந்த விவகாம் தொடர்பாக விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் பரவி வரும் கள்ளச்சாராய விற்பனையால் கடந்த 8-ஆம் தேதி இம்மாவட்டத்தை சேர்ந்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளயானது. 

பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இக்குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்தார். சுமார் 100 உயிர்களை பலிவாங்கி இந்த கோர சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Trending News