பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் 2 முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை; சம்பவம் இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் கத்தார் அணிக்கு எதிராக இந்திய அணி போராடித் தோல்வியைத் தழுவியது.
கோவில்பட்டியில் மது போதையில் முன்னாள் இராணுவ வீரர் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இளைஞர் ஒருவர் நடிகர் விஜயின் புகைப்படத்தை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகின்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, அருகில் இருந்த இளைஞர் ஒருவர், - திடீரென தனது செல்போனில் இருந்த விஜய் போட்டோவை காட்டிச் சென்றுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் தவெக தலைவர் விஜய் என்று தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.